Wednesday, May 13, 2009

மணத்தக்காளி பச்சடி

தேவையானவை: 

மணத்தக்காளி வற்றல்- 1/4 கப்
தயிர்- 2 கப்
பெருங்காயதூள்- கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு கொஞ்சம்,
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை: 

வற்றலை எண்ணெய் விட்டு பொரிய வறுத்து கொள்ளவும். இன்னும் கொஞ்சம் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், பெருங்காயம் வறுத்து ஆறியபின் அதில் தயிர், மணத்தக்காளி வற்றல் போட்டு நன்கு கலந்து சாப்பிடவும். வற்றலில் உப்பு இருப்பதால் பார்த்து உப்பு போடவும். கறிவேப்பிலை மேலே போடவும். இந்த பச்சடி பித்ததுக்கு ரொம்ப நல்லது. வயிற்றுக் கோளாறுகள் வராமல் தடுக்கும். வயிற்றுபுண் இருந்தால் ஆற்றும்.

No comments:

Post a Comment